முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா





04.12.2021 தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

. ----------------------

 தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா 2021 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (04.12.2021)    அன்று  நடைபெற்றது.


 இந்நிகழ்ச்சியில் 204 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 




மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய மாற்றுத்திறனாளி அலுவலத்தை சார்;ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:


 தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளையும் மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடும் விதமாக இருக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அழகாக உடையணிந்து, ஆர்வமாகவும் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 


நமது மாவட்டத்தில் சுமார் 95 சதவித மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை 100 சதவிதமாக உயர்த்த வேண்டும். நமது மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.





 அதனடிப்படையில் இன்றைய தினம் 63 பயனாளிகளுக்கு ரூ.48.20 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 80 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 8 பயனாளிகளுக்கு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பேட்ரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 5 பயனாளிகளுக்கு ரூ.5.80 லட்சம் மதிப்பிலான முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் செயற்கை அவயம், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50000 வங்கி கடன் மானியம், 11 பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை;கான ஆணையினையும், 35 பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான ரெடிங்டன் பவுண்டேசன் சென்னை சார்பாக நல்லயான்காது கேளாதோருக்கான மாணவ, மாணவியருக்கு கற்றல் கல்வி உபகரணம் (வுயடிடநவ) என மொத்தம் 204 பயனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.








மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு கொண்டு செல்வதற்கு மாற்றுத்திறனாளிகளின் அனைத்து சங்கங்களும் உறுதுணையாக உள்ளது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்றுவது எளிமையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 


இன்றைய தினம் இந்த உள் விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளால் அமைக்கப்பட்ட அரங்கில் கைவினைப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறையினரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். 


 நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சிவசங்கரன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, இணை இயக்குநர் மருத்துவம் மரு.முருகவேல், சமூக நலத்துறை அலுவலர் திருமதி.தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) திரு.விநாயகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...