முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்நடைகளுக்கு காப்பிடு செய்து, பயன் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

 



தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளுக்கு  தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தகவல் 


தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும,; கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் பொருட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று வருடங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஒரு நபர் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2-1ஃ2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும.; வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கால்நடைகளுக்குரிய காப்பீடு பிரிமியத்தில் 50மூ மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட அருகாமையில்; உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும.; காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும் 

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறப்பு ஏற்பட்டால் காதுவில்லையும், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கப்படும் கால்நடைகளின் இறப்புச் சான்றினையும,; காதுவில்லையும் புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்