அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள்

       


                                                               

 கொரோனா இரண்டாவது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் பல்வேறு விதமாக அரசு மக்களுக்கு நிதி வழங்கியும் ரேஷன் பொருள்கள் வழங்கியும் மக்களின் துயர் துடைத்து வருகின்றன இருந்தும் மக்கள் தங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு தொண்டு நிறுவனமும் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றனர்                                                                                                    

                                                                            அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி கட்டுமான தொழிலாளர்களுக்கு சுமார் 150 நபர்களுக்கு ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம்,  கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் வீட்டு  மளிகைப் பொருள்களை தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம்  சார்பாக  அதன் அலுவலகத்தில்  17 6 2021 வியாழக்கிழமை  தூத்துக்குடி மாவட்ட தலைவர் "மின்னல் அம்ஜத் "  அவர்கள் வழங்கினார்கள்                                                                                                                                  


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக    பேராசிரியை  பாத்திமா பாபு , மற்றும் டி.ரோஸ் தொண்டு நிறுவனம் தாகூர்  மற்றும்   ,   அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல சங்க         மாவட்ட செயலாளர் முருகேசன்  மற்றும் ஞானதுரை, சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 


கருத்துகள்