முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் : சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் வழங்கினார்.

 


தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார். 

----------------

தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார். 

பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

         


தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல்  ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. அதேபோல் 30.7.2021 அன்று 4370 நபர்களுக்கு என மொத்தம்; 8876 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 97 நபர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகளுக்கும்;, முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் என மொத்தம் 97 நபர்களுக்கு இன்றைய தினம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், வட்ட வழங்கல் அலுவலர் திருமதி.வதனாள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்