முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்டாத்தி ஊராட்சி பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு



நாள்: 16.02.2022

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்  நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட முள்ளன்விளை, குமாரபுரம், பட்டான்டிவிளை  ஆகிய  பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் 


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி முள்ளன்விளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் இணைய வழி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதை பார்வையிட்டதோடு, மாணவிகளிடம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து கேட்டறிந்து சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தின் அருகாமையில் உள்ள மகளிர் சுய உதவிக் கட்டிடத்தினை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



குமாரபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு  உரக் கொட்டகையினை பார்வையிட்டதோடு, மண்புழு உரம் தயாரிக்கும் முறையினை ஆய்வு செய்து, இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரத்தினை ஊராட்சிமன்றம் வாயிலாக பொது மக்களுக்கு விற்பனை செய்ய  ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பட்டான்டிவிளை கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் கழிவு நீர் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இங்கு அறிய வகை மூலிகை செடிகள், கீரைகள், பாரம்பரிய பழவகைகள் உற்பத்தி செய்திட ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



எஸ்வி.பி.எஸ் செல்வமணி நகர் பகுதியில் அமைந்துள்ள நட்டாத்தி ஊராட்சி மன்ற சமுதாய நலக் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும்  நெகிழி கழிவுகளை தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டதோடு, இதன் வாயிலாக கிடைக்பெறும் ஊதியம் குறித்து கேட்டறிப்பட்டது. மேலும், நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது. 



நட்டாத்தி பகுதி சாலையோரங்களில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரினை, நிலத்தடி நீராக மாற்றுவதற்கு  மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில்  மழைநீர் சேகரிப்பு அகழி வெட்டும் பணியினை பார்வையிட்டதோடு மழைக்காலத்திற்கு முன்னதாக பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்கள் பயணத்தின் போது தெரிவித்தார்கள்.


நடைபெற்ற ஆய்வின் போது, திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுரேஷ் (வ.வ), திரு.ஆண்டோ (கி.ஊ), மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சுகந்தி பாலின், ஒன்றிய பொறியாளர் திருமதி.முத்து, நட்டாத்தி ஊராட்சி மன்ற தலைவா் செல்வி.சுதாகலா,  உதவி பொறியாளர் திரு.பிரேம்சந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...