மாநில அளவிலான வூசு போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி


மாநில அளவிலான வூசு  போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  மாநில அளவிலான வூசு போட்டி     2022:  கடந்த ஜனவரி  மாதம்  - 27, 28 தேதியில்  நடைபெற்றது

 இந்த போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்


கலந்து கொண்டவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த S அருண் குமார் - 45 கிலோ உடல் எடை பிரிவிலும் . M. முத்துவேல் - 52கிலோ எடை பிரிவிலும் -  தங்கப்பதக்கத்தையும் - S.அசோக்குமார்  -28 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும்._ தினேஷ் பாலா  -  முத்துசூரிய ராகுல்   ஆகியோர்   39 கிலோ   எடை பிரிவில் வெங்கல பதக்கமும்    பெற்றனர்


மாநில அளவிலான வூசு போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான வூசு போட்டிக்கு தகுதி பெற்றனர்

இந்த மாநில போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.TV பேட்ரிக்ஸ் அவர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து கௌரவ படுத்தினார்

  மேலும் இந்த மாணவர்களை. தூத்துக்குடி மாவட்ட  வூசு கழக செயலாளர்  திரு. ஞானதுரை - சாய் இண்டர்நேஷனல்  அகடாமி  சார்பில் அதன் இயக்குனர் முத்து சங்கர் குமார், மற்றும் வூசு கழக நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினார்கள்



கருத்துகள்