முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு

 


உக்ரைன் நாட்டிலிருந்து இராமநாதபும் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை                                மாண்புமிகு  சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள்,              மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்                     ஆகியோர் வரவேற்றார்கள்

-----------------------

தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று (13.03.2022) வரவேற்றார்கள். 

இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் மாணவர்களை இந்தியா அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவர்களை அழைத்து வருவதற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என அறிவித்ததோடு, மாணவர்களை அழைத்து வரும் பணியினை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற பரமக்குடி நகராட்சி பகுதியை சார்ந்த திரு.கண்ணன், திருமதி.அம்பிகாபதி ஆகியோரின் மகன் செல்வன்.சந்தோஷ் கண்ணன் என்பவர் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரை தமிழக அரசு சார்பில் சென்னை – தூத்துக்குடி வான் வழியாக அழைத்துவரப்பட்டு, தரைவழியாக இராமநாதபுரத்திற்கு வழியனுப்பிவைக்க உரிய நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மருத்துவ மாணவன் சந்தோஷ் கண்ணனை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றதோடு தூத்துக்குடிக்கு வழியனுப்பி வைத்தார்கள். சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட மாணவனை, தூத்துக்குடி விமான நிலையத்தில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன், அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று வரவேற்றார்கள்.

இது குறித்து மாணவன் சந்தோஷ் கண்ணன் தெரிவித்த்தாவது- 

நான், உக்ரைன் நாட்டில் ருபிசினி, லுகான்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவர்களை அரசின் சொந்த செலவில் அழைத்து வருவது மிகவும் பெருமைக்குறியது. மேலும்,என் போன்ற மாணவ, மாணவியர்கள் போர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, தமிழக அரசு இது போன்ற உதவிகளை வழங்கி எங்களை, எங்களது சொந்த ஊருக்கு அழைத்து வந்தற்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் மாணவ, மாணவியர்கள் சார்பாகவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவாகளுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...