முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

44வது சர்வதேச சதுரங்க போட்டி : தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துவக்க விழா ஜோதி


  

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வரவேற்றார்கள்.

--------------------------

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.07.2022) வரவேற்று பேசியதாவது:  

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மிகத் துல்லியமாக திட்டங்கள் தீட்டி குறுகிய காலத்தில் மிக பிரமாண்டமான அளவில் முன்னேற்பாடு பணிகளை செய்து நாளை துவக்க விழா நடைபெறுகிறது. சதுரங்க விளையாட்டு துவக்க விழா ஜோதியானது இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துவக்க விழா ஜோதி வருகை தராத மாவட்டங்களுக்கு இதுபோன்ற ஜோதியினை அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த ஜோதியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் வாயிலாக சென்னைக்கு எடுத்து செல்லப்படுகிறது. எடுத்து செல்லப்படும் ஜோதியினை மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். 187 நாடுகளில் இருந்து வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். அதுபோல நமது மாவட்டத்தில் இருந்து 50 பேர் பார்வையாளர்களாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு போட்டிகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட வேம்பார் அரசு மேல்;நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி உயர்நிலைப்பள்ளியில் இருந்து கணித ஆசிரியை, நாலாட்டின்புதூர் உயர்நிலைப்பள்ளியில் இருந்து பயிற்சியாளர்களாக பங்கேற்கிறார்கள். மாணவர்கள் சதுரங்கம் விளையாடுவதினால் ஞாபக சக்தி, திட்டமிடுதல், கூரிய சிந்தனை, பொறுமை உருவாகும். எனவே மாணவர்கள் சதுரங்கம் விளையாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என               மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக இன்று காலை விளாத்திகுளத்திற்கு வருகை தந்த ஜோதியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்திற்கு வருகை தந்த ஜோதியினை வட்டாட்சியர், பேரூராட்சி தலைவர்கள், மாணவ, மாணவிகள் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜோதியினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜிசரவணன்,  கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள், பணியாளர்கள் வரவேற்றனர்.


 அதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரத்திற்கு வருகை தந்த ஜோதியினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் ஆகிய பகுதிகளுக்கு வருகை தந்த ஜோதியினை வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கா.மகாலட்சுமி, கோவில்பட்டி வட்டாட்சியர் திருமதி.ஷீலா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு.கருணாநிதி, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு.ரத்தினராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்