முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை.

 தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடியில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அங்கு இறந்து கிடந்தவர் 1 ஆம் கேட் அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் செல்வம் (43) எனத் தெரியவந்தது. 


இவருக்கு திருமணமாகி மனைவி மாரியம்மாள் (36) என்ற மனைவியும் நாகலட்சுமி (15),  சுந்தர் (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அலங்காரதிட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர். நேற்று வரை பட்டறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்து  உள்ளார். தனது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசி உள்ளார். 


இந்நிலையில் இன்று அதிகாலை  தன்னுடைய பைக்கை மோட்டார் தண்டவாளம் அருகில் நிறுத்திவிட்டு, பின்னர் ஏதோ ஒரு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் கடன் சுமையாலும்,  மேலும் தான் செய்த தச்சு வேலைக்கு  முறையாக பணம் கிடைக்காததாலும் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...