தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம் திரு இருதய மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது
பள்ளி கிறிஸ்மஸ் விழாவில் அருட்சகோதரி மரிய நேசம் தலைமை வகித்தார் கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரை ஏற்றினார் வரவேற்புரை ஆற்றினார் மாணவ மாணவிகளின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் கீதா ஆராதனைகள் கிறிஸ்துவின் பிறப்பு குறிக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் வருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
அவர் தனது உரையில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும் மதத்தை மதிப்பதோடு மனிதநேயத்தை வளர்த்து அதை ஒற்றுமையுடன் பேணி பாதுகாக்க வேண்டும் மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்
தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட் அவர்கள் பேசுகையில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் செல்போன் உபயோகப்படுத்தாமல் குழந்தைகள் படிக்க வேண்டும் குழந்தைகள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் தேவையற்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்தக்கூடாது அனைவரிடமும் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்
தூத்துக்குடி வடக்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாட்ஷா பேசுகையில் எனது தாய் ஆசிரியராக பணியாற்றினார் நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் நாசரேத் பள்ளியில் மூன்று வரும் படித்தேன் தினமும் உணவு உட்கொள்ளும் முன் எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்து வாழவேண்டும் எனஜெபம் செய்துவிட்டு தான் உணவை அருந்துவேன். நான் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அதே போல எல்லோரும் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று பேசினார்
விழாவில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் மாந அம்பாசங்கர் ஒன்றிய கவுன்சிலர் பொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா பெலிக்ஸ் மற்றும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மரிய செல்வம் மாவட்ட பிரதிநிதி நெல்சன் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுதர்சன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் கௌதம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
முன்னதாக அப்பள்ளியில் மாணவ மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றிக்கோப்பை கேடயம் மெடல் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன அறிவியல் சார்ந்த தயாரிப்பு பொருட்களையும் பள்ளி அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் பார்வையிட்டனர் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி சாரால் ரோஸ் நன்றியுரை ஆற்றினார்
கருத்துகள்
கருத்துரையிடுக