முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடகளப் போட்டியில் வெங்கலபதக்கம் வெற்ற மாணவி; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து


 

          நாள்:30.03.2023                                     

தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற செல்வி.ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களை இன்று (30.03.2023) சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு.ராகவானந்தம் (தந்தை), திருமதி.ரா.மாலதி (தாய்)  ஆகியோரது மகள் செல்வி ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு வென்றுள்ளார். இந்நிலையில், தான் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்களிடம் இன்றையதினம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், இதுபோன்று இன்னும் பல பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டும் என மாணவியை வாழ்த்தினார்கள். 

இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரபு அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட தடகள கழகச் செயலாளர் திரு.பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட தடகள கழகப் பொருளாளர்-பயிற்சியாளர் திரு.அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் திரு.மெய்கண்டன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...