தடகளப் போட்டியில் வெங்கலபதக்கம் வெற்ற மாணவி; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து


 

          நாள்:30.03.2023                                     

தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற செல்வி.ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களை இன்று (30.03.2023) சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு.ராகவானந்தம் (தந்தை), திருமதி.ரா.மாலதி (தாய்)  ஆகியோரது மகள் செல்வி ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு வென்றுள்ளார். இந்நிலையில், தான் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்களிடம் இன்றையதினம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், இதுபோன்று இன்னும் பல பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டும் என மாணவியை வாழ்த்தினார்கள். 

இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரபு அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட தடகள கழகச் செயலாளர் திரு.பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட தடகள கழகப் பொருளாளர்-பயிற்சியாளர் திரு.அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் திரு.மெய்கண்டன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

.

கருத்துகள்