முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

 

தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 
 


13-07-2025 ஞாயிற்று கிழமையன்று தூத்துக்குடி ஆயர் இல்ல இளையோர் அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அருட்தந்தை செல்வராசு தலைமை வகித்தார். பணி நிறைவு தமிழாசிரியர் புலவர் முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். 

தூத்துக்குடி கவிஞர் நெல்லை தேவனின் 'வலிகளின் ஊர்வலம்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் அறம் வெளியிட,தமிழ்ச் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் பெற்றுக் கொண்டார். தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் மற்றும் திருச்சி எழுத்தாளர் ஏகரசி தினேஷ் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினர். 
 

 

பணிநிறைவு ஆசிரியர் அல்பர்ட், பணி நிறைவு நெடுஞ்சாலைத்துறை கவிஞர் செல்வராஜ், பணிநிறைவு வங்கி மேலாளர் மாணிக்கவாசகம், இலக்கிய ஆர்வலர் லாரன்ஸ், தமிழ் இலக்கிய பேரவைச் செயலர் அருமைநாயகம், அரங்கக்கலைப் பயிற்றுநர் கலைவளர்மணி சக்திவேல், குறும்பட இயக்குனர் அருந்ததி அரசு, கவிஞர் செந்தில்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 'வலிகளின் ஊர்வலம்' நூலாசிரியர், கவிஞர் நெல்லை தேவன் ஏற்புரை நிகழ்த்தினார்.
 

 
தொடுவானம் கலை இலக்கியப் பேரவை சார்பில், இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் தலைவர் டாக்டர் கொ. மா.கோதண்டத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், முத்தாலங்குறிச்சி காமராசுவிற்கு தொடுவானம் இலக்கியச்சுடர் விருதும், தூத்துக்குடி சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சங்கருக்கு தொடுவானம் கலைச்சுடர் விருதும் வழங்கிச் சிறப்பித்தனர். 
 
 
 
 

 
 
விழா நிறைவில், பணிநிறைவு கருவூலத்துறை செய்யது முகமது ஷெரீப் நன்றி கூறினார். விழாவில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்