தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்;.
கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் தோட்டிலோன்பட்டி சோதனைச் சாவடி, இளையறனேந்தல் சோதனைச் சாவடி மற்றும் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக சென்று அங்கு நடைபெறும் போலீசாரின் வாகன தணிக்கையை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வாகனங்களில் வருபவர்களிடம், அவர்கள் என்ன காரணத்திற்காக எங்கு செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து தேவையில்லாமல் வெளியே சுற்றுவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக் கதரிவன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக