கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு. . நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள்திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (10.06.2021) கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள் திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 125 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் திரு. ஜெகஜீவன் செய்திருந்தனர்.
இதில் தமிழன்டா கலைக்கூடம் மாநில செயலாளர் திரு. கதிர்வேல், மாநில பொருளாளர் திரு. பிரம்மராஜ், மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள், கலைக்குழு உறுப்பினர் திரு. மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாககுமாரி உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக