தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது
தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும்.... தமிழகத்தில் 1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும்
நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு பொங்கல் திருநாள் முன்பணம் வழங்கிய
உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது
70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம் உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை சங்கத்தின் வாயிலாக கேட்டுகொள்ளப்பட்டது
பணியில் இருந்து ஓய்வு பெற்ற வீடு இல்லாத அலுவர்களுக்கு இலவச வீட்டு மனை - அல்லது வாரியத்தின் மூலமாக அடிப்படை வீடுகள் ஒதுக்கீடு செய்ய கேட்டு கொள்ளபடுகிறது. போன்ற தீர்மாணங்கள் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தூத்துக்குடி மாநகர தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.இரா. மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமுக நலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் திரு.சேகர், மற்றும்
தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க மாவட்ட தலைவி திருமதி.R.சங்கீதா ரமேஷ், திருமதி.S.மேரி, திரு.M.ராஜ், திரு.S.ஜெயசிலன், திரு.S.சண்முகவேல் ஆகியோர் பேசினார்கள் இறுதியில் திருமதி.M.வள்ளி அவர்கள் நன்றி கூறினார்
கருத்துகள்
கருத்துரையிடுக