முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .

 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை .                                         




தூத்துக்குடி  மாவட்ட ஆயுதப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (31.12.2020) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருத்துவதுறையினர், அதிலும் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மிகப்பெரிய பலன் கிடைத்து வருகிறது. கபசுரக் குடிநீர் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக உள்ளது என்றும், 


தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது என்று முகக்கவசம் அணியாமலும,; சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து விடக்கூடாது. தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை இருப்பதால்; தொடர்ந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும்.  தகுந்த முறையில் கபசுரக் குடிநீர் அருந்துதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்றும் இந்த சித்த மருத்துவ கண்காட்சி மூலம் அன்றாடம் நாம் உண்ணக்கூடிய உணவுகள் பற்றியும் அதன் பயன்களை தெரிந்து கொள்ளலாம், நமது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.  


இந்த நிகழ்ச்சயில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி. ராஜசெல்வி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். திரு. சங்கர ராம சுப்பிரமணியன், முள்ளக்காடு ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் திருமதி. திலகவதி அரியநாச்சி, உதவி மருத்துவ அலுவலர் டாக்டர். பிரீத்தா மற்றும் மருந்தாளுநர் திருமதி. ஞான சௌந்தரி, உதவியாளர் திரு. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வர மூர்த்தி, திரு. நடராஜன்  மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்