நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்கம்


 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்

-------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்க விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் கூட்டமைப்புகள் மூலம்  தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்தனர். 

பின்னர் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். பொதுமக்கள் காய்கறிகளை காலை 10 மணிக்குள் வாங்கும் நிலை இருந்தது. அந்த நேரங்களில் மார்க்கெட் பகுதியில் அதிகமான கூட்டங்கள் சேர்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தின் கிராமம் மற்றும் பேரூராட்சி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவைகள் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பகளின் மூலம் நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் காய்கறி வியாபாரிகளுக்கும் எந்தெந்த பகுதிக்கு செல்லலாம் என வரையறை செய்யப்பட்டு கிராமப்பகுதிகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கூட்டம் அதிகமாக சேராமல் கொரோனா பரவலை தடுக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 9662 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளது. இதில் தகுதியுள்ள குழுக்களை இதுபோன்ற விற்பனைக்கு ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொறுப்பு) திரு.லட்சுமணன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திருமதி.மல்லிகா, திரு.பாலசுந்தரம், திரு.சாமுதுரை, திரு.ரூபன், முக்கிய பிரமுகர்கள்  திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.ஜெகன், திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஜெயக்கொடி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்