முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்கம்


 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்

-------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்க விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் கூட்டமைப்புகள் மூலம்  தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்தனர். 

பின்னர் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். பொதுமக்கள் காய்கறிகளை காலை 10 மணிக்குள் வாங்கும் நிலை இருந்தது. அந்த நேரங்களில் மார்க்கெட் பகுதியில் அதிகமான கூட்டங்கள் சேர்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தின் கிராமம் மற்றும் பேரூராட்சி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவைகள் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பகளின் மூலம் நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் காய்கறி வியாபாரிகளுக்கும் எந்தெந்த பகுதிக்கு செல்லலாம் என வரையறை செய்யப்பட்டு கிராமப்பகுதிகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கூட்டம் அதிகமாக சேராமல் கொரோனா பரவலை தடுக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 9662 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளது. இதில் தகுதியுள்ள குழுக்களை இதுபோன்ற விற்பனைக்கு ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொறுப்பு) திரு.லட்சுமணன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் திருமதி.மல்லிகா, திரு.பாலசுந்தரம், திரு.சாமுதுரை, திரு.ரூபன், முக்கிய பிரமுகர்கள்  திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.ஜெகன், திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஜெயக்கொடி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்