தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம்

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் நடைபெற்றது.

---------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் அன்று (23.05.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜீ.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில், காவல் துறை மற்றும் அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தளர்வில்லா ஊரடங்கினை முறையாக செயல்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

பின்னர் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா தொற்றினை பரவாமல் தடுத்து மக்களை காப்பாற்றிட வேண்டும், கொரோனா தொற்று பரவலுக்கான தொடர் சங்கிலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். தமிழகத்தில் சுமார் 16000க்கு மேல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக சுமார் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்டும் வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையின் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா தொற்றினை ஒழிப்பதற்காக தளர்வில்லா ஊரடங்கு அறிவித்துள்ளார்கள். மக்களின் ஒத்துழைப்போடு தளர்வில்லா ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. நமது மாவட்டத்தில் காய்கறிகடைகள், பழக்கடைகள், மாளிகை கடைகள் வைத்துள்ளவர்கள் தள்ளுவண்டி மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்று விற்பனை செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காய்கறிகளின் விலைப்பட்டியல் அன்றாடம் வெளியிடப்படும்.  

மேலும் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிள் அறிவுத்தலின்படி, அனுமதி சீட்டு வழங்கும் பணிகளில் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முறையாக செயல்படுத்திட வேண்டும். பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திட வேண்டும். மேலும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். தளர்வில்லா ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா தொற்றுநோயினை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வருகின்ற ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கினை அறிவித்துள்ளார்கள். கொரோனா தொற்றும் மேலும் பரவாத சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக தளர்வில்லா ஊரடங்கு தொடர்பாக ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்வதற்கும், விவசாய நிலங்களில் விளையும் வேளாண் விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு நிலவரம் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்துது தொடர்பாக அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றினை ஒழிப்பதற்காக பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து நமது மாவட்டத்தில் இருந்து கொரோனா தொற்றினை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொறுப்பு) திரு.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதிபாலன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குற்றாலிங்கம், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திரு.ரவிசந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் மரு.அனிதா(கோவில்பட்டி), மரு.போஸ்கோராஜா (தூத்துக்குடி), தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் திருமதி.சுகந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.






கருத்துகள்