முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

 



தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது -  2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


 தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், திருமதி. சரண்யா, தலைமைக் காவலர் திரு. முத்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாலக்குமார், காவலர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் கோமஸ்புரம் வடக்குப் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த கொம்மையா மகன் யமஹா முருகன் (38), தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஜான்சன் பெலிக்ஸ் (25) மற்றும் இருவரோடு சேர்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தனிப்படை போலீசாரைப் பார்த்ததும் ஓடினர், அவர்களில் யமஹா முருகன் மற்றும் ஜான்சன் பெலிக்ஸ் ஆகிய இருவரைப் பிடித்தனர். அப்போது அவர்கள் இரு நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தனர். மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  


மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்