முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

 


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  துவக்கி வைத்தார்.

------------------------

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (04.07.2021) இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்டு, தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்ககளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் ஒன்றிய அரசிலிருந்து அதிக அளவிலான தடுப்பூசிகளை பெற்று, தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள். விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவனம் சார்பில் நிறுவன பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தடுப்பூசி போட வாருங்கள் என அழைத்த நிலை மாற்றப்பட்டு பொது மக்கள் தடுப்பூசி எப்போது போட வருவீர்கள் என கேட்கும் நிலை உருவாகி உள்ளது.                                                                                                                         


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் இருந்து தான் அதிக மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை எளிமையாக்கி விரைவில் அனுமதி பெறுமாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். நமது மாவட்டத்திலும் இது போன்ற அனுமதிகறள் விரைந்து வழங்கப்பட்டு தமிழகமும் அதிக மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நன்னீர் மீன்வளர்ப்பு ஆந்திர மாநிலத்தில் அதிகம் உள்ளது. அதைப்போலவே தமிழகத்திலும், நன்னீர் மீன்வளர்ப்பு அதிகரித்திட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பேசினார். 

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, திமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன தலைமை இயக்குநர் திரு.ஜெகதீசன், நிர்வாக இயக்குநர்கள் திரு.செந்தில்ராஜன், திரு.சுப்புராஜன், மேலாளர் திரு.தாமஸ், முக்கிய பிரமுகர்கள் திரு.ராமஜெயம், திரு.பி.கே.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்