விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

 


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  துவக்கி வைத்தார்.

------------------------

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (04.07.2021) இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்டு, தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்ககளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் ஒன்றிய அரசிலிருந்து அதிக அளவிலான தடுப்பூசிகளை பெற்று, தமிழகமெங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள். விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவனம் சார்பில் நிறுவன பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தடுப்பூசி போட வாருங்கள் என அழைத்த நிலை மாற்றப்பட்டு பொது மக்கள் தடுப்பூசி எப்போது போட வருவீர்கள் என கேட்கும் நிலை உருவாகி உள்ளது.                                                                                                                         


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் இருந்து தான் அதிக மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை எளிமையாக்கி விரைவில் அனுமதி பெறுமாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். நமது மாவட்டத்திலும் இது போன்ற அனுமதிகறள் விரைந்து வழங்கப்பட்டு தமிழகமும் அதிக மீன் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நன்னீர் மீன்வளர்ப்பு ஆந்திர மாநிலத்தில் அதிகம் உள்ளது. அதைப்போலவே தமிழகத்திலும், நன்னீர் மீன்வளர்ப்பு அதிகரித்திட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பேசினார். 

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, திமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன தலைமை இயக்குநர் திரு.ஜெகதீசன், நிர்வாக இயக்குநர்கள் திரு.செந்தில்ராஜன், திரு.சுப்புராஜன், மேலாளர் திரு.தாமஸ், முக்கிய பிரமுகர்கள் திரு.ராமஜெயம், திரு.பி.கே.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்


கருத்துகள்