முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

 



கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக       தூத்துக்குடியில் பெரும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது  


இந்த நிலையில் தூத்துக்குடி  ( சேது பாதை  ரோடு  ) ராமேஸ்வரம் செல்லும் சாலை  பகுதியில்   அமைந்துள்ள ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு ,பகுதிகளில் உள்ள தெருக்கள். மற்றும் குடியிருப்பு பகுதியிலும்  வீட்டுக்குள்ளேயும் நீர்  புகுந்ததால்  குழந்தைகள், முதியவர் மிகவும் பாதித்துவருவதோடு நோய் தொற்று புரவும் நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்



இந்தபகுதிகளில்  ஆக்கிரமிப்பினால்  நீர் ஓடைகள்  அடைக்கப்பட்டதோடு அந்த நீர் ஓடைகள்  இருந்த இடம் தெரியாமல்  போனதால்...  மழை நீர்  தெருக்களையும்,  வீடுகளையும் ஆக்கிரமித்து சூழ்ந்து கொண்டது.

தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் , இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி    ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு , ராஜபாளையம் , பகுதிகளில் உள்ள மக்கள்      6-12-2021  திங்கள் கிழமை அன்று காலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர்  . இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 3 மணி நேர த்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 




இந்த சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் - வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி துரிதமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து பின் ஆர்ப்பாட்டத்தினர் கலைந்து சென்றார்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்