கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக தூத்துக்குடியில் பெரும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தூத்துக்குடி ( சேது பாதை ரோடு ) ராமேஸ்வரம் செல்லும் சாலை பகுதியில் அமைந்துள்ள ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு ,பகுதிகளில் உள்ள தெருக்கள். மற்றும் குடியிருப்பு பகுதியிலும் வீட்டுக்குள்ளேயும் நீர் புகுந்ததால் குழந்தைகள், முதியவர் மிகவும் பாதித்துவருவதோடு நோய் தொற்று புரவும் நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்
இந்தபகுதிகளில் ஆக்கிரமிப்பினால் நீர் ஓடைகள் அடைக்கப்பட்டதோடு அந்த நீர் ஓடைகள் இருந்த இடம் தெரியாமல் போனதால்... மழை நீர் தெருக்களையும், வீடுகளையும் ஆக்கிரமித்து சூழ்ந்து கொண்டது.
தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் , இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு , ராஜபாளையம் , பகுதிகளில் உள்ள மக்கள் 6-12-2021 திங்கள் கிழமை அன்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 3 மணி நேர த்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இந்த சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் - வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி துரிதமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து பின் ஆர்ப்பாட்டத்தினர் கலைந்து சென்றார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக