நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா

 


புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன்  அவர்கள் வழிகாட்டுதலின்படி நாசரேத் ரயில்வே நிலையம் எதிரில் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமையில்   நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது 

 இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஞானையா அவர்கள் கழகப் பிரமுகர் பெரியதுரை, 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், நாசரேத் நகர துணை செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச்செயலாளர் பிரபு, நாசரேத் நகர இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயக்குமார், வார்டு செயலாளர் கணேசன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்