தூத்துக்குடி மாணவர்கள் தொடந்து சாதனை! காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாராட்டு



      சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த12 ம் தேதிமுதல் 15ம் தேதி வரையில் சென்னையில்  ந டை பெற்ற மாநில அளவிலா  குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து   கொன்டார்கள்  இந்த போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் 50 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும் மாஃபூஸ் 40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ரம்யா 52 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும். தீபக் 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் சதுரேஷ் சிவா. ராய்ராயன். சந்தியாகு ஆகியோர் வெங்கலப் பதக்கமும் பெற்றனர்.               28 - 08- 2018 செவ்வாய் அன்று தூத்துக்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் தூத்துக்குடி நகரதுணை காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றிபெற்ற, மாணவர்களுக்கு மெடல்கள்.மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி, ஊக்கப்படுத்தினார்.                  மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ஞானத்துரை, பெருளாளர் சரவணக்குமார், தலைமை பயிற்சியாளர் ராஜசிங்கம், பயிற்சியாளர் சுப்புராஜ். ஸ்டீபன், ஆகியோர் கலந்து கொண்டனர்.