தினமும் விபத்தை சந்திக்க நேரிடும் சாலை பிரிவுகள் - குழப்பத்தில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஒட்டிகள்.


தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான இரண்டாம் கேட்டிலிருந்து நான்காம் கேட். வரையிலான சாலையாகும். இந்த சாலையானது, மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையமும், பள்ளிக்கூடமும், திருமண மண்டபங்களும், இருப்பதால்... மக்கள் பயன் படுத்தும் முக்கிய சாலையாக கருதப்படுகிறது.                                      இருசக்கர வாகன ஒட்டிகள்  இந்த சாலையில் நான்காம் கேட் அல்லது  புதிய பேருந்து நிலையம் செல்ல  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே கடந்து செல்ல வேண்டும்.  இந்த பாலத்தின் கீழே கடந்து  இடதுபுறமாக செல்கின்ற வாகனங்களை பின் தொடரும்  சில இரு சக்கர வாகன ஒட்டிகள் முந்தி செல்வதற்காக பாலத்தின் இரு பக்கமும் இருக்கின்ற  இரு துண்களுக்கு இடையே   மின்னல் வேகத்தில் நழைந்து முன் செல்கின்ற வாகனத்தை கடக்கி றார்கள். இவ்வாறு இரு தூண்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் கடந்து செல்வதால் எதிரே வருகின்ற லாகளங்கள்  மற்றும் பாலத்தின் கீழ் புதிய பேருந்து நிலைத்திற்கு செல்லும்  பேருந்துகள் அல்லது இதர லாகனங்கள் மீது மோதுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த  இடத்தில் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் இரு தூண்களுக்கு இடையே தடுப்பு  அல்லது வேகத்தடை  அமைத்தால் நலமாக இருக்கும் என  விபத்தை சந்திக்காமல்  நூல் இழையில்   உயிர் தப்பிக்கும் வாகன ஒட்டிகளின் வேண்டுதலாக இருக்கிறது.  எனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை உரிய  நடவடிக்கையை துரிதமாக எடுத்தால் ..  வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கலாமே!                                                                                                                                     "நமது எழுத்தாணி"