முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது;

கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும்,இயற்கையும் ,இறைவனையும் நேசித்து. பல தொண்டுளை செய்துவரும் எழுத்தாளர்களுக்கு பாராட்டி சான்றிதழும். வழங்கப்பட்டது

 மணிமேகலை பிரசுரம்  ரவிதமிழ்வாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில்  அமெரிக்க உலக தமிழ் பல்கலைகழகத்தின் வேந்தர் செல்வின் குமார்  அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...சாதனையாளர்களுக்கும்  எழுத்தாளர்களுக்கு பட்டமும்,பாராட்டு சான்றிதழும் வழங்கினார். மேலும் இந்த விழாவிற்கு  எழுத்தாளர் செல்வத்துரை அவர்களின் மனைவி முத்துலெட்சுமி,மகன் லெனின்துரை,மருமகள்விமலா,  பேத்தி  நிஷி கா டாக்டர் சிவனாகரன் ,எ.துரை ,
எ.செல்வ மூத்தி,கருப்பையா,கண்ணய்யா, ஞாணத்துரை,வீராச்சாமி, இருளப்பன்
இந்திரா,பாண்டியராஜன்,வ.உ.சி துறைமுகம் மு.முருகேசன் இ.சிவகாமிநாதன் , என  இது போன்று  பட்டம் மற்றும் பாராட்டு பெற்ற எழுத்தாளர்களின் குடும்பத்தினர் ,நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
  






          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்