மகாகவி சுப்பிரமணிய பாரதியார்க்கு திரு உருவ சிலை- ஜனநாயக மக்கள் உரிமைக்கழகம் கோரிக்கை!

மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு பூங்காவுடன் சிலை அமைக்க வேண்டும் என " ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம்." சார்பில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோரிக்கை மனு 10 - 12-2018 திங்கள்  கிழமை கொடுக்கப்பட்டது.
 இந்திய  இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ... பாடுபட்ட தலைவர்களில் பலர் பிறந்த பூமி நமது  தூத்துக்குடி மாவட்டம் . அவர்களில் மகாகவி சுப்பிரமணி பாரதிக்கு தனி இடம் உண்டு. அவர் தனது கவிதை மூலமாக இந்திய சுதந்திரத்திற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வித்திட்டவர். ஆனால் அவருடை  திரு உருவ சிலை தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகர் தூத்துக்குடியில் இல்லை. பாரதியார்க்கு பெறுமை சேர்க்கும் வகையில் பூங்காவுடன் கூடிய  சுப்பிரமணிய பாரதிபின் சிலை   தூத்துக்குடியின் பிரதான பகுதியான வ.உ.சி கல்லூரிக்கு சமீபபாக  அமைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J கார்த்திக்கேயன் அவர்களின்  வழி காட்டலின் படி  தூத்துக்குடி  மத்திய மாவட்டத் தலைவர் திரு.N. மகாராஜன் -  மத்திய மாவட்ட செயலாளர்   கரிகாலன் ஆகி யோர் தாங்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.