மது கடைகளை நிரந்தரமாக மூட "அருட்தந்தை " கோரிக்கை

21-01-2019  நிங்கள் கிழமை்                              மது கடைகளை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மாவட்டம் காயாம் மொழி சார்ந்த அருட்தந்தை  | "ஜேம்ஸ் பீட்டர்" மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு " என்ற  வார்த்தைகளை ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும், அரசு விளம்பரபடுத்துகிறது.            கடந்த ஐந்து ஆண்டு காலததில் பூரண மது விலக்கு என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா  அம்மையார் அவர்களும் லாக்குறுதி அளித்ததின் பேரில்அதனடிப்படையில்அதிகப்படியானமதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என   ஊடகங்கள் வாயிலாக  வந்த செய்தி மகிழ்ச்சியை தருகிறது மது கடைகளே இல்லாத தமிழகம்  உருவாக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் அது தான். உழவர் திருநாள். குடியரதின விழா, சுதந்திர தின விழா, மே தினம், நபிகள் நாயகம் வள்ளலார் தினம்.காந்தி ஜெயந்தி,மகாவீரர்    தினம், ஆகிய தினங்களில் மதுக்கடைகளை, மூடுமாறு அரசு சட்டம்  இயற்றியுள்ளது  அது போல் ... உலகிற்கு ஒளியாக இயேசுவின் பிறந்த  தினமான கிருஸ்மஸ் விழாவை முன்னிட்டு டிசம்பர் 24, 25,  ஆகிய இரு தினங்களில் மது கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்குமாறு ஏற்கனலே தமிழக அரசை  கடிதம் வாயிலாக தான்,கேட்டுக்கொன்டதனை தொடர்ந்து மீண்டும்  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு மது கடைகளை நிரந்தமாக மூட  பரிந்துரைக்க மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.அதில் மதுவினால் ... உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், குடும்பசூழல் பாதிக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு, மற்றும் குழந்தைகளில் கல்வி, எதிர்கால வாழ்க்கை  பாதிப்பதோடு, இந்த சமுதாயம் சீர்கேடு அடைந்து வருவதை தடுக்க முடியும்,  எனவே மது கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.