தூத்துக்குடி ஒட்டப்பிடாரம், தாலுகா யூனியன் அலுவலகத்தில் புதிய ஆணையாளர் திரு.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டு ... ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்க ளுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நாகப்பட்டியில் உள்ள வட்ட கினறு பாழடைந்த நிலையில் துர்நாற்றம் அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு கேடு, மற்றும் ஆபத்து விளைவிக்கும் நிலையிலும் இருப்பதால் ... அதை மூடிவிட வேண்டும் எனவும் மேலும், பழுது அடைந்த நிலையில் இயங்கி வரும் அங்கன் வாடி கட்டித்தை சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்று பழடைந்த நிலையில் உள்ள கினற்றை மூடவும், பழுது அடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீர்அமைத்து தருவதாகவும், அங்கன்வாடி அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் ஆணையாளர் திரு.நாகராஜன்.