தூத்துக்குடி மாவட்டம் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்
ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர் நேற்று வட்டார அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் பணி அமர்த்த கூடாது எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அரசு ஆசிரியர் கூட்டணி சங்கம் அருகில் 300க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
சுப்பிரமணியன்,மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கணேசன் தமிழக ஆசிரியர் கூட்டணி, பழனிச்சாமி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ,பவுல் ஆபிரகாம் மாவட்ட தலைவர் TNPTF