மாவட்ட அளவிளான குத்துச் சண்டை போட்டி .. ஆர்வத்துடன் மாணவ-மாணவியர்கள்

   



 மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி  200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்பு .                                     தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி, 27-01-2019 ஞாயிறு கிழமை தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள "குட்  ஷேப்பர்ட் " பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.      இந்த போட்டியில்   மினி சப்-ஜீனியர், சப்-ஜுனியர் , ஜூனியர் , சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில மாவட்ட முழுவதிலிருந்தும்  200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காலை 10 மணியளவில் ...   தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை கழக தலைவர் திரு.சுப்புராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்பு உரை நிகழ்த்த ... பொப்பிஸ் ஜிம்  திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி பாக்ஸிங் தலைவர் திரு. ராஜேஸ், தூத்துக்குடி மாவட்ட பாக்ஸ்ஸிங் அஷோலியேஷன் மூத்த செயலாளர் திரு.ஞானத் துரை அவர்களும், குத்துச்சண்டை போட்டிகளை துவக்கி வைத்தார்கள். இப்போட்டியின் நடுவர்களாக.. திரு P.சுப்புராஜ்,.  I .ஸ்டீபன், A .இசக்கி ராஜா, மனோ, ராஜேஸ், திரு செல்வமணி, சுந்தர், ஆனந்த், ஜாபர், முனியசாமி, அருன் குமார், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்