மாநகராட்சி ஆணையருடன் பேச்சு வார்த்தை ....

          தூத்துக்குடியில்  03-01-2019 வியாழக்கிழமையன்று  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிர் உள்ள வணிக நிர்வனத்தில் மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  பிளாஸ்டிக் தடை தொடர்பாக ரெய்டு நடத்திய போது  தமிழ்நாடு  வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கும் மாநகராட்சி அதிகாரி கருகரும்  இடையே காரசாரமான விவாதமாக மாற சாலையில் பரபரப்பு ஏற்படவே போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. காவல் துறை உடனே சம்பவ இடத்திற்கு வந்து  போக்குவரத்து சரி செய்.தனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையரை சந்திக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்து,  மாநகராட்சி    அலுவலகத்தில்  ஆணையரை சந்தித்தனர். அதிரடியாக அதி காரிகள் ரெய்டு நடத்துவதை தவிர்த்து, பரிமுதல் செய்யப்ட்ட  பொருள்களை திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டும், மேலும்  சிறு வியாபரிகளின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக்  மறு சுழற்சி செய்ய கூடியவை எனவும் வியாபாரிகளுக்கு மேலும் அவகாசம்  கொடுக்க வேண்டும் எனவும், இந்த சந்திப்பில். .. வணிகர் சங்கத்தினர் கோரிக்கைகளை வைத்தனர் , இந்த கோரிக்கைகளை  பரிசீலிப்பதாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது     இந்த பேச்சு வார்த்தை சந்திப்பில் தமிழ்நாடு  வணிகர் சங்க பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன்,  விநாயகமூர்த்தி, மற்றும் வணிகர் சஙக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.