குத்து சண்டை போட்டி . வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு டாக்டர் ஜேஸ்மின் ராஜேஸ் பரிசுகளை வழங்கினார்.

                 
                 
                 
                                                    
தூத்துக்குடியில்... கடந்த 26-01-2019  சனி கிழமை அன்று கோரம்பள்ளம், குட் ஷேப்பர்ட் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மினி சப்-னியர், சப்ஜீனியர், ஜூனியர் , சீனியர், என பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை .. குட் ஷேப்பர்டு பள்ளி முதல்வர் டாக்டர் G. பத்மினி வள்ளி அவர்களும்... . பப்பையா ஜிம் திரு. J. சூரியா அவர்களும், தூத்துக்குடி குத்துச் சண்டை கழக மூத்த செயலாளர் திரு.ஞான துரை அவர்களும்,தலைவர் S ராஜேஸ் அவர்களும், துனைத் தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும், துவக்கி வைத்தார்கள்.                                     அன்று மாலையில் இந்த குத்துச் சன்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் : ஜேஸ்மின் ராஜேஸ் M B.B.S அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்களையும், கேடயமும் / சான்றிதழ்கள் வழங்கி, மாணவ, மானவியர்களை வாழ்த்தி பாராட்டி பேசினார். ஒட்டு மொத்த "சேம்பியன் ஷிப்" பட்டத்திற்கான முதல் இடத்தை ஐ.எஸ்.என் கிளப் மற்றும் இரண்டாம் இரண்டாம் இடத்தை புரூஸ் .லி பாக்ஸிங் கிளப் 52. புள்ளிகளுடன் வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை குத்து சண்டை கழக செயலாளர் திரு.சுப்புராஜ். மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர்  திரு.ராஜலிங்கம், செயலாளர் திரு.இசக்கி ராஜா, துணைச் செயலாளர் திரு.ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டி பேசினார்கள்.