" ரிட்டை டு லைப் " என்பது வயது முதிர்வை காட்டுவது அல்ல அது வாழ்க்கையின் அனுபவத்தின் உயர்வையும், அதன் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணி ஓய்வு என்பது தான் செய்யும் வேலை ஸ்தலத்திலிருந்தும் செய்து வந்த வேலையிலிருந்தும் அரசாங்க ஆணையின் படி தன்னை விடுவித்து கொள்வது தான் ஓய்வு என்று நாம் கூறுகிறோம். அது ஓய்வு? அல்ல பணி நிறைவு தான் .அது . . ஒரு மனிதன் தனது சிந்தனைக்கும், ஆர்வத்திற்கும செயல் பாட்டிற்கும் ஒய்வு என்பது கிடையது. ஒரு மனித னின் தேவைகளைப் பொறுத்தே அவர்களின் தேடல்கள் அமைகிறது. தேடலை நிறுத்திக் கொண்டால். தான் நிறைவு பெற்ற மனிதனாக இந்த சமூகத்தின் பார்வைக்கும் தெரியும். ஆனால் உள்ளத்துக் குள்ளே ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றும். அப்போது தான்
நாட்கள் போர் அடிக்க தொடங்குகிறது இப்போதுதான் ஆண்டவன் உங்களை கொண்டு ஏதோ ஒன்றை நடப்பிக்க நினைக்கிறார்.இந்த ,நாட்களில்தான்,பனிநிறைவு பெற்ற இதயங்களே' உங்கள் மனதும், சிந்தளையும்செயலும்,இந்த.சமுதாயத்திற்கும். உங்கள் குடும்பத்திற்கும் நம் தேசத்திற்கும் தேவை. இந்த பணி நிறைவு என்ற ஒன்றால் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால தலைமமுறைக்கு வேலை பெறுகின்ற வாய்ப்பை நாம் உருவாக் கி தருவதாக அமையும். ஒய்வு என்பது மனதுக்கும் இல்லை. ஓய்வு பாரமல்ல, நமது புதிய சாதனைக்கு மற்றொரு வாசலாக அமைகிறது. தூத்துக்குடி : E . சிவகாமிநாதன்