முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் மாரிமுத்துவுக்கு பாராட்டு

                                       புதுவை தமிழ் சங்கம் சார்பில் அதன் 9ம் ஆண்டு விழா கடந்த 05-1-2019 அன்று  நடைபெற்ற அதன் 9ம் ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தூத்துக்குடியை சார்ந்த கவிஞர் மாரிமுத்து இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களை புதுவை கலை, மற்றும் பண்பாடுதுறை இயக்குனர் திரு.அ.கணேசன் அவர்கள் பராட்டி பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.                        
       பரிசு பெற்ற கவிஞர் மாரிமுத்து  அவர்களை "நமது எழுத்தாணி " அன்போடு வாழ்த்துகிறது.
                       
          கவிஞர் மாரிமுத்துலின் கவிதை                              
                   "எழுதுகோல் வேலை"

எழுதுகோல்
ஏழுலகையும் புரட்டிப் போடும்
நெம்புகோல்

அடிமுதல் முடிவரை
ஆய்ந்து  முடிவு சொல்லும்

புத்தம் புது எழுத்தாணி
பூலோக சக்கரத்தின்  அச்சாணி

இலக்கிய சிற்பியின்
சிறு கை உளி

புதையுண்ட வரலாறுகளை
புதுப்பிக்கும்
புரிய  வைக்கும்

எரியுண்ட ஏகாதிபத்தியத்தை
எளிதாக
எடுத்துரைக்கும்

தேசத்தின்  தீமைகளை
தீயென பொசுக்கும்
தீப்பந்தம்

உறங்கும் எரிமலை
குழம்புகளை
உசுப்பேற்றும் உக்கிரக் காற்று

பட்டம்  படைக்கும்
சட்டம்  திருத்தும்
ஆண்டவனிடம் வேண்டும்
ஆள்பவரை தூண்டும்

ஊமையரை பேசவைக்கும்
பூவையரை புயலாக்கும்

புரட்சி  விதைக்கும்
புதுமை  விவசாயி   !


கவிஞர் , ஆ.  மாரிமுத்து. தூத்துக்குடி .          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்