
பரிசு பெற்ற கவிஞர் மாரிமுத்து அவர்களை "நமது எழுத்தாணி " அன்போடு வாழ்த்துகிறது.
கவிஞர் மாரிமுத்துலின் கவிதை
"எழுதுகோல் வேலை"
எழுதுகோல்
ஏழுலகையும் புரட்டிப் போடும்
நெம்புகோல்
அடிமுதல் முடிவரை
ஆய்ந்து முடிவு சொல்லும்
புத்தம் புது எழுத்தாணி
பூலோக சக்கரத்தின் அச்சாணி
இலக்கிய சிற்பியின்
சிறு கை உளி
புதையுண்ட வரலாறுகளை
புதுப்பிக்கும்
புரிய வைக்கும்
எரியுண்ட ஏகாதிபத்தியத்தை
எளிதாக
எடுத்துரைக்கும்
தேசத்தின் தீமைகளை
தீயென பொசுக்கும்
தீப்பந்தம்
உறங்கும் எரிமலை
குழம்புகளை
உசுப்பேற்றும் உக்கிரக் காற்று
பட்டம் படைக்கும்
சட்டம் திருத்தும்
ஆண்டவனிடம் வேண்டும்
ஆள்பவரை தூண்டும்
ஊமையரை பேசவைக்கும்
பூவையரை புயலாக்கும்
புரட்சி விதைக்கும்
புதுமை விவசாயி !
கவிஞர் , ஆ. மாரிமுத்து. தூத்துக்குடி .