முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

               
               
31-02-2019 வியாழன்  :   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி பிரிவு சார்பில் தூத்துககுடியில்... 2018 - 2019 ம் ஆண்டுக்கான நடை பெற்ற முதலமைச்சர்  கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு தூத்துக்குடி உதவி ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள், மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.     தடகளம, வாலிபால், பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக், கூகப்பந்து, கூடைப்பந்து, நீச்சல்,  கபாடி, டேபிள் டென்னிஸ், ஆகிய போட்டிகளில்    கலந்து கொண்டு  முதல் இடம் பெற்ற வீரருக்கு ரூபாய் 1000 மும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 750 ம், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 500 ம் வீதம் ரூபாய் 4, 25,250 பரிசு தொகை வழங்கப்பட்டது                                இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவர்கள், மேலும் இவர்களுக்கான சீறுடைகள், மற்றும் போக்குவரத்து வசதிகள் அரசு செலவிடும் என தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.