.
விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 205 சார்பாக, தூய்மைப்பணியில் இளைஞர்கள் என்ற தலைப்பில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்க்கு கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா.முனைவர் செ.சுரேஷ்பாண்டி வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயசிங் தலைமையுரையாற்றினார்.இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு முனைவர் ராஜரத்தினம் துவக்கி வைத்து பேசும்போது,கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனவே தான் இதுபோன்ற கிராமப்புற கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்திட அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.மேலும் இம்முகாமில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள ,அரசுநடுநிலைப்பள்ளியை கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து ,பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்து,சுற்றுச்சுவர் கம்பி வேலி அமைத்துக்கொடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி,அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், பிள்ளைகளை படிக்கவைத்த பெற்றோர்களுக்கும்,அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இம் முகாமின் நிறைவில் குற்றவியல் துறை பேராசிரியர் முனைவர் சிவக்குமார்.எழுத்தாளர் உதயசங்கர்,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபன்,பள்ளிதலைமையாசிரியர் தவமணி,விளாத்திகுளம் காவல்துணைகண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.முகாம் நிறைவில் முகாமில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இறுதியில்
பேராசிரியர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார். அரசுப்பள்ளியை தத்தெடுத்த கல்லூரி மாணவர்களை அப்பகுதிபொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டினர்.