முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு பள்ளிகளில் மீது அக்கரை கொண்ட கல்லூரி மாணவர்கள்


.
 விளாத்திகுளம் அருகே  நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 205 சார்பாக, தூய்மைப்பணியில் இளைஞர்கள் என்ற தலைப்பில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்க்கு கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா.முனைவர் செ.சுரேஷ்பாண்டி வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயசிங் தலைமையுரையாற்றினார்.இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு முனைவர் ராஜரத்தினம் துவக்கி வைத்து பேசும்போது,கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு எனவே தான் இதுபோன்ற கிராமப்புற கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்திட அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.மேலும் இம்முகாமில் புதூர் ஒன்றியம் முத்துச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள ,அரசுநடுநிலைப்பள்ளியை கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து ,பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்து,சுற்றுச்சுவர்  கம்பி வேலி அமைத்துக்கொடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி,அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், பிள்ளைகளை படிக்கவைத்த பெற்றோர்களுக்கும்,அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்
 கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இம் முகாமின் நிறைவில் குற்றவியல் துறை பேராசிரியர் முனைவர் சிவக்குமார்.எழுத்தாளர் உதயசங்கர்,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபன்,பள்ளிதலைமையாசிரியர் தவமணி,விளாத்திகுளம் காவல்துணைகண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.முகாம் நிறைவில்  முகாமில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இறுதியில்
பேராசிரியர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார். அரசுப்பள்ளியை தத்தெடுத்த கல்லூரி மாணவர்களை அப்பகுதிபொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்