முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பதில் அளிக்காமல் இருந்தால் பணி நீக்கம்

     


பதிவு: பிப்ரவரி 26,  2019 04:15 AM
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்  விடுத்துள்ளார்                        தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இதற்காக மேல்முறையீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில், மேல்முறையீடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் மேல் முறையீடு செய்தவர்கள் 15 பேர் கலந்துகொண்டனர்.

விசாரணையை தொடர்ந்து அரசின் பல்வேறு துறை அலுவலக பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கலந்துகொண்டு பேசினார். இந்த விசாரணை மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தை தொடர்ந்து பிரதாப்குமார் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் அளிக் கப்படாத 15 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக வந்தேன். கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் பதில் அளிக் கப்படாத மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
   பொதுமக்கள் அரசிடம் இருந்து தேவையான தகவல் களை பெறுவதற்காக உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவ்வாறு இல்லாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலரை பணி நீக்கம் செய்யவும் துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரமும் தகவல் ஆணையருக்கு உள்ளது. எனவே, அரசு துறை அலுவலர்கள் இச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் .  "  நன்றி தினதந்தி                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்