தி.மு.க வரவேற்பு கொடியை நட்டியவர் மின்சாரம் தாக்கி விபத்து


*கனிமொழியை வரவேற்க கட்சி கொடி கம்பம் நட்டிய போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளான வாலிபர்*          
  திருச்செந்தூரில் இன்று (28.2.2019)  மாலை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியை வரவேற்க உடன்குடி பகுதியில் விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.
   தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ வும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இன்று மாலை திருச்செந்தூரில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பரிசுவழங்க இருக்கிறார்.
  இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ப
தற்காக வருகை தர இருக்கும் கனிமொழி கருணாநிதியை வரவேற்று விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் உடன்குடி பகுதியில் நேற்று ( 27.2.2019 )இரவு ஈடுபட்டிருந்த குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் முத்துகிருஷ்ணன் ( 26 வயது ) என்பவர் கட்சி கொடி நட்டும் போது மேலே சென்றுகொண்டு இருந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கொடிகம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள்  அங்கிருந்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசுமருத்துவமணையில் சேர்ந்தனர்.அங்கு அவர் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.