முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி.மு.க வரவேற்பு கொடியை நட்டியவர் மின்சாரம் தாக்கி விபத்து


*கனிமொழியை வரவேற்க கட்சி கொடி கம்பம் நட்டிய போது மின்சாரம் தாக்கியதில் விபத்துக்குள்ளான வாலிபர்*          
  திருச்செந்தூரில் இன்று (28.2.2019)  மாலை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியை வரவேற்க உடன்குடி பகுதியில் விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.
   தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ வும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இன்று மாலை திருச்செந்தூரில் மெகா கோலப்போட்டி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பரிசுவழங்க இருக்கிறார்.
  இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ப
தற்காக வருகை தர இருக்கும் கனிமொழி கருணாநிதியை வரவேற்று விளம்பர பதாகை மற்றும் கட்சி கொடி கம்பம் நட்டும் பணியில் உடன்குடி பகுதியில் நேற்று ( 27.2.2019 )இரவு ஈடுபட்டிருந்த குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் முத்துகிருஷ்ணன் ( 26 வயது ) என்பவர் கட்சி கொடி நட்டும் போது மேலே சென்றுகொண்டு இருந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கொடிகம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள்  அங்கிருந்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசுமருத்துவமணையில் சேர்ந்தனர்.அங்கு அவர் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்