
4 - 2 - 2019 திங்கள் கிழமை அம்மா அதிமுக சார்பில் 41 வது வார்டு செயலாளர் திரு K. காசிலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் . தூத்துக்குடியில் 41வது வார்டு டூவிபுரம் 2ம் தெருவில் இருக்கும் கிருஸ்துவ ஆலயத்திற்கு எதிரில் கட்டப்பட்டு வரும் தாலூகா அலுவலகம் அருகில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. தேங்கிய கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவுகின்ற சூழல் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடையுடன் இ
இனைக்கப்படவில்லை ... இதை உடனே சரி செய்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கேட்டுக் கொண்டார்