இட ஒதுக்கீடு கேட்டு ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை.

தூத்துக்குடி அண்ணாபழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாள்கள் நல சங்க உறுப்பினர்கள் 83ஆட்டோ ஒட்டுனர்கள் கடந்த  பல வருடங்களாக தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்டாண்ட் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தில் பழைய பேருந்து நிலையத்தினை இடம் மாற்றம் செய்யும் வகையில் புதிய பேருந்து நிலையத்தோடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற போவதாக தகவல் அறிந்ததை தொடர்ந்து அவ்வாறு இடம் மாற்றம் செய்யும் பட்சத்தில் திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பேருந்துகள் , புறப்படும் இடத்திற்கு அருகில் எங்களது சங்கத்தை சார்ந்த பழைய பேருந்து நிலைய 83ஆட்டோ ஒட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்கி தொழில் செய்ய அனுமதி வழங்குமாறு  மாலட்ட ஆட்சி தலைவரிடம்  கோரிக்கை மனு ஒன்றை தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.