தொடங்கிடும்.. இரயில் பயணத்தில் .. தொடர்ந்திடும் கால தாமதம்.


தூத்துக்குடி

      சென்னையிலிருந்து புறப்படும் தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் வண்டி எண்  16129 குருவாயூர் எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சி சந்திப்புக்கு மாலை 6:30 மணி வந்தடைகிறது. ஆனால் தூத்துக்குடி ரயில்வே  நிலையத்திற்கு சென்றடைய 8:40 மணி ஆகிவிடுகிறது. வந்த  இந்த பயண நேரம் பயனிகளால் காலதாமாக கருதப்படுகின்றது.  இந்த குறை எப்போது தீர்க்கப்படும் என பயணிகளின் ஏதிர்ப்பார்பாக உள்ளது. இதனால் மதுரை மண்டல மேலாளர் தீர்வு காண்பாரா! சென்னை To குருவாயூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக வரவேண்டிய இடத்தில் 8:45 மணி அளவில் மணி அளவில் வருவதேனோ?மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சரியான உணவகங்கள், தேநீர் கடைகள் இல்லை. இதனால் வயதானவர்கள்,உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள்,மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துகுள்ளாகின்றனர். மேலும் தூத்துக்குடியிலிருந்து  புறப்பட்டு வரும்  குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் மணியாச்சி ரயில் சற்றுப் சந்திப்பில் தூத்துக்குடி லிங் பெட்டிகளை இனணக்கும் இடத்,திலும், சென்னையிலிருந்து வருகின்ற குருவாயூர்  தூத்துக்குடி செல்லும் லிங்க் பெட்டிகளை துண்டித்து மாற்று இஞ்சின் பொருத்தப்படும் இடத்தில்...ரயில் நீளத்தை காட்டி லும், பிளாட்பாம் நீளம் குறைவான அளவில் ரயில் பெட்டிகளை நிறுத்தப்படுவதால்...  பயணிகள் தட்டவாளத்தின் தரை மட்டத்தில் இருந்து  சிரமப்பட்டு எவ்வி  ஏற வேண்டியுள்ளது.  மணியாச்சி சந்திப்பு நிலையத்தில் பயணிகள் கேன்டின் செல்ல தண்ட
 வாளங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது போன்று நமது கண்களுக்கு தென்படும் மக்களின் சிரமங்கள் ...தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு தென்படுமா? .