விமானம் கோளாறு தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை ரத்து.


தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசு நிகழ்ச்சி தொடர்பாக கன்னியாகுமரி செல்ல சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான  நிலையம் வருவதாக திட்டமிடப்பட்டது இதனை தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் பெண்கள் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க மேளதாளங்களோடும், மலர் கும்பங்களோடு காத்திருந்தனர். மேலும்
அரசு அதிகாரிகள் - பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஏராளமானோர்  ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரவேண்டிய விமாணம் தொழில்நூட்ப  கோளாறு ஏற்பட்ட தின் காரணமாக முதல்வர்  தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டு மற்றொறு விமானம் மூலம் மதுரை வருவதாக  தகவல் வந்தது.. இதனை தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு படையினர், காவல் துறை உயர் அதிகாரிகள் ,கட்சி பிரமுகர்கள் மதுரைக்கு விரைந்தனர்.  இதனால் முதல்வர் வருகைக்காக விமான நிலையத்தின் உள்ளேயும், விமான நிலையத்திற்கு வரும் வழியிலும் தொண்டர்கள் அதிகாலையில் இருந்து... காத்திருந்து  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.