வெயிலில் பணி செய்யும் காவலர்களுக்கு மோர் லெமன் ஜீஸ்

                 
 வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலம் முழுவதும் நீர்,மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் இன்று காலை 10.15 மணிக்கு தென்பாகம் காவல் நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் லெமன் ஜுஸ் போன்ற பாணங்கள் காவல் துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.