தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...

          செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
        ------------------------------

செய்யும் பணியில்
சேவை செய்வதில்
அன்னையின் அன்னையே !

பொறுமையில் நீ  பூமாதேவி
கருணையில் நீ மெழுகுவார்த்தி
நேசத்தில் நீ நீரூற்று
அன்பிலே என்றும்
நீ எங்கள்  அன்னை !

இரவு  பகல் மறந்து
உறவு  பகை துறந்து
உற்சாகமாய்
உள்ளப் பூரிப்புடன்
புன்னகையில் பணி செய்து
பிணி நீக்கும்  எங்கள்
பாசத் தேவதை நீ !

அன்னை வளர்த்த தேகத்தின்
ஆரோக்கியம்  காத்திடும்
நேசமிகு நெஞ்சம்
நீ என்றும்  எங்கள்
மாற்றுத் தாய் !

செவிலித் தாயே
உன்
கருணைப் பார்வையும்
கனிவான பேச்சுமே
எங்கள்  நோய் தீர்க்கும்
அருமருந்து  !

மரணப் புயலே வந்தாலும்
மாசற்ற உன்
கருணைப் பார்வையில்
வலுவிழந்து ஓடிடுமே !

எத்தனை  மருந்துகள்  உண்டாலும்
உன்
அன்பு, கருணை , தாய்மை , நேசம்
கலந்தபின்னே தான்
சுகமானோம் நாங்கள்  !

இல்லம் மறந்து உறைவிடமாக
உன்னருகில் வந்தோம்
தேகம் தேர்ச்சி  பெற
நாளும்  உன் சேவை
நாடி வந்தோம்

செவிலித் தாயே
வாழிய நீ  நீடூழி !

உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள் !

தூத்துக்குடி  கவிஞர்  ஆ. மாரிமுத்து..