முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...

          செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
        ------------------------------

செய்யும் பணியில்
சேவை செய்வதில்
அன்னையின் அன்னையே !

பொறுமையில் நீ  பூமாதேவி
கருணையில் நீ மெழுகுவார்த்தி
நேசத்தில் நீ நீரூற்று
அன்பிலே என்றும்
நீ எங்கள்  அன்னை !

இரவு  பகல் மறந்து
உறவு  பகை துறந்து
உற்சாகமாய்
உள்ளப் பூரிப்புடன்
புன்னகையில் பணி செய்து
பிணி நீக்கும்  எங்கள்
பாசத் தேவதை நீ !

அன்னை வளர்த்த தேகத்தின்
ஆரோக்கியம்  காத்திடும்
நேசமிகு நெஞ்சம்
நீ என்றும்  எங்கள்
மாற்றுத் தாய் !

செவிலித் தாயே
உன்
கருணைப் பார்வையும்
கனிவான பேச்சுமே
எங்கள்  நோய் தீர்க்கும்
அருமருந்து  !

மரணப் புயலே வந்தாலும்
மாசற்ற உன்
கருணைப் பார்வையில்
வலுவிழந்து ஓடிடுமே !

எத்தனை  மருந்துகள்  உண்டாலும்
உன்
அன்பு, கருணை , தாய்மை , நேசம்
கலந்தபின்னே தான்
சுகமானோம் நாங்கள்  !

இல்லம் மறந்து உறைவிடமாக
உன்னருகில் வந்தோம்
தேகம் தேர்ச்சி  பெற
நாளும்  உன் சேவை
நாடி வந்தோம்

செவிலித் தாயே
வாழிய நீ  நீடூழி !

உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள் !

தூத்துக்குடி  கவிஞர்  ஆ. மாரிமுத்து..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்