முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன் நலமற்ற சேவையில் தனி சிறப்புடையோர் இவர்கள் ...

          செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
        ------------------------------

செய்யும் பணியில்
சேவை செய்வதில்
அன்னையின் அன்னையே !

பொறுமையில் நீ  பூமாதேவி
கருணையில் நீ மெழுகுவார்த்தி
நேசத்தில் நீ நீரூற்று
அன்பிலே என்றும்
நீ எங்கள்  அன்னை !

இரவு  பகல் மறந்து
உறவு  பகை துறந்து
உற்சாகமாய்
உள்ளப் பூரிப்புடன்
புன்னகையில் பணி செய்து
பிணி நீக்கும்  எங்கள்
பாசத் தேவதை நீ !

அன்னை வளர்த்த தேகத்தின்
ஆரோக்கியம்  காத்திடும்
நேசமிகு நெஞ்சம்
நீ என்றும்  எங்கள்
மாற்றுத் தாய் !

செவிலித் தாயே
உன்
கருணைப் பார்வையும்
கனிவான பேச்சுமே
எங்கள்  நோய் தீர்க்கும்
அருமருந்து  !

மரணப் புயலே வந்தாலும்
மாசற்ற உன்
கருணைப் பார்வையில்
வலுவிழந்து ஓடிடுமே !

எத்தனை  மருந்துகள்  உண்டாலும்
உன்
அன்பு, கருணை , தாய்மை , நேசம்
கலந்தபின்னே தான்
சுகமானோம் நாங்கள்  !

இல்லம் மறந்து உறைவிடமாக
உன்னருகில் வந்தோம்
தேகம் தேர்ச்சி  பெற
நாளும்  உன் சேவை
நாடி வந்தோம்

செவிலித் தாயே
வாழிய நீ  நீடூழி !

உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள் !

தூத்துக்குடி  கவிஞர்  ஆ. மாரிமுத்து..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...