செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
------------------------------
செய்யும் பணியில்
சேவை செய்வதில்
அன்னையின் அன்னையே !
பொறுமையில் நீ பூமாதேவி
கருணையில் நீ மெழுகுவார்த்தி
நேசத்தில் நீ நீரூற்று
அன்பிலே என்றும்
நீ எங்கள் அன்னை !
இரவு பகல் மறந்து
உறவு பகை துறந்து
உற்சாகமாய்
உள்ளப் பூரிப்புடன்
புன்னகையில் பணி செய்து
பிணி நீக்கும் எங்கள்
பாசத் தேவதை நீ !
அன்னை வளர்த்த தேகத்தின்
ஆரோக்கியம் காத்திடும்
நேசமிகு நெஞ்சம்
நீ என்றும் எங்கள்
மாற்றுத் தாய் !
செவிலித் தாயே
உன்
கருணைப் பார்வையும்
கனிவான பேச்சுமே
எங்கள் நோய் தீர்க்கும்
அருமருந்து !
மரணப் புயலே வந்தாலும்
மாசற்ற உன்
கருணைப் பார்வையில்
வலுவிழந்து ஓடிடுமே !
எத்தனை மருந்துகள் உண்டாலும்
உன்
அன்பு, கருணை , தாய்மை , நேசம்
கலந்தபின்னே தான்
சுகமானோம் நாங்கள் !
இல்லம் மறந்து உறைவிடமாக
உன்னருகில் வந்தோம்
தேகம் தேர்ச்சி பெற
நாளும் உன் சேவை
நாடி வந்தோம்
செவிலித் தாயே
வாழிய நீ நீடூழி !
உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள் !
தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து..
------------------------------
செய்யும் பணியில்
சேவை செய்வதில்
அன்னையின் அன்னையே !
பொறுமையில் நீ பூமாதேவி
கருணையில் நீ மெழுகுவார்த்தி
நேசத்தில் நீ நீரூற்று
அன்பிலே என்றும்
நீ எங்கள் அன்னை !
இரவு பகல் மறந்து
உறவு பகை துறந்து
உற்சாகமாய்
உள்ளப் பூரிப்புடன்
புன்னகையில் பணி செய்து
பிணி நீக்கும் எங்கள்
பாசத் தேவதை நீ !
அன்னை வளர்த்த தேகத்தின்
ஆரோக்கியம் காத்திடும்
நேசமிகு நெஞ்சம்
நீ என்றும் எங்கள்
மாற்றுத் தாய் !
செவிலித் தாயே
உன்
கருணைப் பார்வையும்
கனிவான பேச்சுமே
எங்கள் நோய் தீர்க்கும்
அருமருந்து !
மரணப் புயலே வந்தாலும்
மாசற்ற உன்
கருணைப் பார்வையில்
வலுவிழந்து ஓடிடுமே !
எத்தனை மருந்துகள் உண்டாலும்
உன்
அன்பு, கருணை , தாய்மை , நேசம்
கலந்தபின்னே தான்
சுகமானோம் நாங்கள் !
இல்லம் மறந்து உறைவிடமாக
உன்னருகில் வந்தோம்
தேகம் தேர்ச்சி பெற
நாளும் உன் சேவை
நாடி வந்தோம்
செவிலித் தாயே
வாழிய நீ நீடூழி !
உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள் !
தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து..