நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் கராத்தே மாணவர்களுக்கு கருப்பு பட்டை தேர்ச்சி போட்டி சமீபத்தில் நாசரேத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமானா மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு கன்னியாகுமாரி மாவட்ட கராத்தே சங்க தலைவர் திரு. பிரேம் குமார் கலந்து கொண்டு கருப்பு பட்டைக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்தார். இந்த போட்டியில் கருப்பு பட்டைக்கு தகுதியான தேர்வு செய்யப்பட்ட மாணவர்களான அலெக்ஸ், மதியழகன், மற்றும் ரஞ்சித் ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.SP.சண்முகநாதன் அவர்கள் கருப்பு பட்டைக்கு தகுதியான மணவர்களுக்கு கருப்பு பட்ட வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கம் அளித்தார். மேலும் சிறப்பாக மாணவர்களை உருவாக்கிய ஆலன் திலக் கராத்தே பள்ளியின் பயிற்சியாளர் திரு. டென்னிசனை வெகுவாக பாராட்டினார். இந்த போட்டிக்கு ஆழ்வை அம்மா பேரவை செயலாளர் திரு.ராமகோபால், நாசரேத் பேரூராட்சி கழக செயலாளர், கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சிகான ஏற்பாடுகைளை சிறப்பாக செய திருந்தனர்