விவசாயிகள் கோரிக்கை, அ.ம.மு க சார்பில் ஹென்றி தாமஸ் மனு

               
19-08-2019  திங்கள் :   தூத்துக்குடி மாவட்டம் ட ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டு  வடகால் தென்கால் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 1500 ஏக்கரில் ..வாழை மற்றும் கொடிக்கால் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக வறட்சி நிலவி வந்த வேளையில் பயிர்கள் வாடுசின்ற நிலை ஏற்பட்டது.. அனணயில் நீர் இல்லாத காரணத்தால் ஆழ்துளை கினறு அமைத்து பயிர்களுக்கு நீர் பாச்சி வந்த நிலையில் கினற்று நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால்   இப்பகுதியில் கால்நடைகள்  குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அனைகட்டில் 110 அடி தண்ணீர் உள்ளது. அனையில் 60 அடி யில் தண்ணீர் இருந்த போது விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படது , தற்போது 110 அடியாக தண்ணீர்  இருக்கின்ற நிலையில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனைத் தொடர்ந்து  வறட்சியால் பயிர்கள் கருகும்  நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தண்ணீர்  திறந்து விடகோரி வடகால் , தென்கால் விவசாயிகள் சங்கம் ஏரல் தாலூகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஹென்றி தாமஸ்  ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்