நிதி மோசடி : மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் புகார் மனு


கடந்த12-10-2019 திங்கள்  கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் தூத்துக்குடி மாவட்டம், கத்தார் தாலுகா அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன்  என்பவர் மாவட்ட ஆட்சி தலைலர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார். அதில் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட அய்யனார் ஊத்து கிராமத்தில் என்க்கு பாத்தியப்பட்ட விவசாய நிலத்தின் கரைையை உயர்த்திப் போட  நிதி கிடைக்க வில்லையென்றும் எங்கள்  கிராம கிளர்க் கொம்பையா என்பவர்,நல திட்டஉதவிகளுக்காள நிதியை கிடைக்கப்பெறாமல் ... செய்து லிட்டதாகவும், மேலும கிராம பஞ்சாயத்து இலவச கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு லருடத்திற்கு முன்பே கட்டியும் அதற்குரிய நிதியும் கிடைக்கப்பெறாமல் செய்து விட்டார்.       இதே போல்   கிராம விவசாய மக்களுக்கான நல திட்டங்கள்  வந்தும்     அதை ஏழை விவசாய மக்களுக்கு  கிடைக்கப்பெறாமல் செய்து மோசடி செய்துள்ளதாகவும், இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே பஞ்சாயத்து  கிளார்க் மீது உரிய நவடிக்கை எடுக்குமாறு     ராம கிருஷ்ணன் தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.