அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு மலர் வெளியீடு

 
   அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா  புதுடெல்லியில்  ஆகஸ்ட் 23, 24, 25 தேதிகளில் டெல்லி முதல்வர் அரவித் கேஜிரிவால் தலைமையிலும், டெல்லி, ஆக்ரா, கான்பூர், லக்னோ, ஆகிய மறை மாவட்ட ஆயர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி உயர் திரு . சூரியன் ஜோசப் அவர்கள்  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என பிரகடனபடுத்தியதை யாராலும் , எந்த காலத்திலும், மாற்றவோ, திருத்தவோ, முடியாது. இந்த மையக் கருத்தை டெல்லி முதல்வரும் தமது உரையில் ஆமோதித்திருந்தார்.
                   
                       இதை தொடர்ந்து 14-11_2019 ஞாயிற்றுகிழமை, தூத்துக்குடியில் ரோச் ஆண்டகை மண்டபத்தில்  தூத்துக்குடி மறை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத் தலைவர்  திரு. S.பீற்றர் பத்திநாதன் அவர்களின் வரவேற்புடன் நூற்றாண்டு மலர் வெளியீடு விழா தொடங்கியது.  இந்த கூட்டமைப்பின் தொடக்க கால முன்னெடுப்புகளையும், வளர்ச்சிகளையும், இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என இந்திய அரசியல் அமைபப்பு   சட்ட,த்தில் பெரியோர்களால் பிரகடனபடுத்தியதை குறிப்பிட்டு.  இதற்கு அகில இந்திய கத்தோலிக்க கூட்டமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு திரு. S.பீற்றர் பத்திநாதன் தனது உரையாற்றினார்.

            .விழாவில் நூற்றாண்டு  மலரை தூத்துக்குடி மறை மாவட்ட                ஆயர் Dr ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை அவர்கள் வெளியிட முதல் பிரதியை அரிமா திரு. A அருள்தாஸ் MJ F பெற்றுக் கொண்டார்  கத்தோலிக்க மக்களின் பனிகளையும் சுட்டி காட்டிய ஆயரின்  சிறப்பான எழுச்சியுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை கவர்ந்தது.                          
                                 இந்த நூற்றாண்டு மலரில் திருமதி கேத்தரின் ரோக்கியசாமி, Dr டெல்பினா  லிவிங்ஸ்டன், திரு. ஜஸ்டின் திவாகர், திரு.மைக்கேல் ,திரு ரூபின் , அட்வகேட் திரு Aஆரோக்கியசாமி, கரோலின் ரோசினி பிரதாப், பேராசிரியர் Aெஜகதீசன், அட்வகேட் திரு. அமல்ராஜ். திரவி?யம், பேராசிரியர் J. லெட்டிஷியா மேரி. திருமதி V . ஆர்த்தி சகாய ரோன்ஸ் , Dr நளினி தாம்ஸ்ன் தம்பதியினர், Pஜான் லியோ , திரு பீற்றர் பத்தி?நாதன், ஆகியேரின் சிறப்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
                       
                          மேலும் இந்த கூட்டமைப்பின் நிகழ்ச்சிக்கு  தூத்துக்குடி நிர்வாகிகள் திருமதி.பெரிதாம்மாள், திரு.டொமினிக் மோகன், திரு ஜோசப், சாரோன், நிர்வாக குழு உறுப்பினர் திரு.வின்சென்ட் .மற்றும் தமிழ்நாடு ழுழுவதுமுள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்