முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர் மழை - மக்கள் அவதி- கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள், வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.

அங்கு உள்ள மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் தற்காலிகமாக தங்கும் வசதி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றி இருந்தாலே மக்கள் இந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். எனவே அரசு இதற்கு பிறகாவது, அந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும்.

ஆளும் கட்சியினர் வெள்ளம் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது. அரசு எந்த விதமான மழைநீர் வடிகாலையும் தூர்வாரவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை குற்றம் சாட்டியும், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதற்கு அரசு நியாயமான தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் ஒரு வருடம் கழித்து வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு தருவார்கள் என்றார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...