முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர் மழை - மக்கள் அவதி- கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள், வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.

அங்கு உள்ள மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் தற்காலிகமாக தங்கும் வசதி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றி இருந்தாலே மக்கள் இந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். எனவே அரசு இதற்கு பிறகாவது, அந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும்.

ஆளும் கட்சியினர் வெள்ளம் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது. அரசு எந்த விதமான மழைநீர் வடிகாலையும் தூர்வாரவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை குற்றம் சாட்டியும், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதற்கு அரசு நியாயமான தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் ஒரு வருடம் கழித்து வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு தருவார்கள் என்றார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்