ஒய்வு ஊதியர்கள் சங்க கூட்டம்

தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்-
தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை  மாலை 5:30 சி;எம் மேல்நிலைப்பள்ளியில்  அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.
 
        தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு  ஓய்வூதியர் சங்க செயலாளர்  சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க  தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க  துணை செயலாளர்   ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க  , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில்    அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S.. நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின்  நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதியர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்